தேசத்தின் மூத்த தளபதி கேணல் கிட்டுவை நாம் வரலாற்றில் எப்படிப் பதிவு செய்வது?

தமிழீழம்

சங்கிலியனுக்குப் பின் அன்னியர்களின் ஆக்கிரமிப்புக்குட்பட்டிருந்த யாழ் சாம்ராஜ்யத்தை மீட்டு மீண்டும் தமிழர் ஆட்சியை நிறுவிய ஒரு வீரத் தளபதியாகவே நாம் கேணல் கிட்டுவை வரலாற்றில் நினைவு கூர வேண்டும்.

ஏனென்றால் கிட்டு நம்பிக்கையின் குறியீடு.

ஒல்லாந்தர், போர்த்துக்கேயர், ஆங்கிலேயர், சிங்களவர் என்றிருந்த தொடர் ஆக்கிரமிப்பை ஒரு கட்டத்தில் வீழ்த்தி யாழ் மண்ணில் தமிழர் ஆட்சியை நிறுவி தேசம் குறித்த நம்பிக்கையை விதைத்தவர் கிட்டு.

அதுதான் தலைவர் கிட்டுவை ‘ தனி மனித சரித்திரம்’ என்று விளித்தார்.

கேணல் கிட்டுவின் இன்றைய நினைவு நாளில் சிங்கள ஆக்கிரமிப்பு அகன்று தேசம் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து போராடுவோம்.

ஏனென்றால் நம்பிக்கை இல்லாமல் தேசம் இல்லை.

( படம் : 1974 தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டு அறிஞர்களுடன் சிறுவனாக கிட்டு)

– பரணி

Leave a Reply