கிளிநொச்சியில் வெடிக்காத இரண்டு குண்டுகள் மீட்பு!
கிளிநொச்சி – பரந்தன்
கிளிநொச்சி – பரந்தன், உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் விளாவோடை பகுதியில் 60 மில்லிமீற்றர் வெடிக்காத குண்டுகள் இரண்டு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

நேற்று வெள்ளிக்கிழமை (23-01-2025) குறித்த பகுதி மக்களால் கண்டுப்பிடிக்கப்பட்டு, பின்னர் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த கிளிநொச்சி பொலிசார் குறித்த இடத்தின் பாதுகாப்பை பலப்படுத்தியதுடன் வெடிக்காத இரு குண்டுகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக மேலதிக விசாரணைகளை, கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.