வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 17’து ஆண்டு நினைவேந்தல் – தமிழீழம்
தமிழீழம்
தமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 17 வது ஆண்டு நினைவேந்தல்.

தமிழீழத்தில் இந்திய மற்றும் சர்வதேச அரசின் துணையோடு சிங்கள இனவெறி அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரை நிறுத்தக் கோரித் தீக்குளித்து உயிரீகம் செய்த வீரத்தமிழ்மகன் கு. முத்துக்குமார் அவர்களுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமையகத்தில் நேற்று (29.01.2026) எழுச்சியுடன் நினைவேந்தல் நடைபெற்றது

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி , பொதுச் செயலாளர் திரு செல்வராசா கஜேந்திரன் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தினர் .

