மகாவலி கங்கையில் மிதந்த பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது!

மகாவலி கங்கை.

மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (16.09.2025) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசவாசிகள் சிலர் கண்டி – பேராதனை , கன்னொருவ பகுதியில் உள்ள  பாலத்திற்கு அடியில் மகாவலி கங்கையில் சடலம் ஒன்று மிதப்பதை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கண்டி – தெல்தொட்ட பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட பெண் அரச ஊழியர் ஒருவர் என பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *