மலேசியாவின் சிரம்பானில் நடைபெற்ற “16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஆசிய கூடைப்பந்து” இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது.

செரெம்பன்

மலேசியாவின் செரெம்பன் நகரில் 16 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் ஆசிய வாலிபால் (‘டிவிசன் பி’) தொடர் நடக்கிறது. இந்திய அணி ‘பி’ பிரிவில் ஈரான், உஸ்பெகிஸ்தான், சமோவா அணிகளுடன் இடம் பெற்றது. லீக் சுற்றில் பங்கேற்ற 3 போட்டியிலும் வெற்றி பெற்று, பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

இதில் நேற்று, ‘பி’ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த இந்தோனேஷிய அணியை சந்தித்தது. முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 24-24 என சமநிலையில் இருந்தன. பின் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, 65-53 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது.

இன்று, இதில் இந்திய அணி, மீண்டும் ஈரானை எதிர்கொள்கிறது. ஏற்கனவே லீக் சுற்றில் ஈரானை வென்ற இந்தியா, மீண்டும் அசத்தினால் கோப்பை வெல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *