தமிழ் இளையோர் அமைப்பு – சர்வதேசம் “தியாக தீபம் லெப்.கேணல் திலீபன்” அவர்களின் நினைவாக பாடல் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.

TYO INTERNATIONAL

தமிழினத்தின் மீது கொண்ட காதலால் எம்மினத்தின் விடுதலைக்காக அகிம்சை வழியில் போராடி 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மாவீரர் ஆகிய தியாகத்தின் மறு உருவம் எங்கள் திலீபன் அண்ணாவின் நினைவு நாட்களில் நாம் பயணித்துக்கொண்டிருக்கின்றோம்.

15.09.1987 – 28.09.1987

அவருடைய நினைவாக அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பினரால் பாடல் ஒன்று உருவாக்கப்பட்டு இன்று வெளியிட்டுள்ளோம்.

இப் பாடலை நாங்கள் அனைவரும் கேட்டு, எங்கள் மனதிலும், எங்கள் வீடுகளிலும் அவருக்காக தீபம் ஒன்றினை ஏற்றி அவர்களது தியாகத்தையும் அவர்களுடைய நீதிக்கான போராட்டத்தையும் மனதில் நிறுத்தி அவரைப் போன்று அகிம்சை வழியில் நாமும் ஈழ விடுதலை நோக்கி பயணிப்போம் என்று உறுதியெடுத்துக் கொள்வோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

நன்றி

அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *