கடந்த 3 மாத காலமாக காணாமல் போயுள்ள குடும்பஸ்தர் ஒருவரை கண்டுபிடிக்க மாவனல்லை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். 

கொழும்பு

கேகாலை – மாவனெல்லை பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மாவனெல்லை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல்போயுள்ள குடும்பஸ்தரின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

  • பெயர் – கொரவக்க விதானலாகே உபாலி திலகரத்ன 
  • வயது – 49
  • முகவரி – பாட்டகம, கல்அதர, கேகாலை

இந்த புகைப்படத்தில் உள்ள குடும்பஸ்தர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் மாவனெல்லை பொலிஸ் நிலையத்தின் 071 – 8591418 அல்லது 035 – 2246222 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *