இலங்கையில் 165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் விநியோகிக்கப் படவில்லை என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு
இதனை இன்று புதன்கிழமை (08.10.2025) அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (08) நாடாளுமன்றத்தில் புதிய வாகன எண் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை ஒப்புக்கொண்டார்.
“நாங்கள் ஆரம்பத்தில் திட்டமிட்டதை விட வாகன இலக்கத் தகடுகளை வழங்குவது மிகவும் தாமதமானது. புதிய வாகன இலக்கத் தகடுகள் ஏழு சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இலங்கையில் இந்த அம்சங்களை சோதிக்கும் பணியை மொரட்டுவை பல்கலைக்கழகத்திடம் ஒப்படைத்தோம். இந்த செயல்முறைக்கு அவர்கள் சுமார் மூன்று மாதங்கள் எடுத்துக் கொண்டனர். இருப்பினும், ஏழு அம்சங்களில் ஆறு அம்சங்களை மட்டுமே அவர்களால் சரிபார்க்க முடிந்தது. எனவே, ஏழாவது அம்சத்திற்காக நாங்கள் சர்வதேச சோதனையை மேற்கொள்ள வேண்டியிருந்தமை தான் இந்த தாமதத்திற்கு முக்கிய காரணம். பாதுகாப்பு மேம்படுத்த நாங்கள் எடுத்த முயற்சிகளும் இதன் விளைவாக தாமதத்திற்கு பங்களித்துள்ளன.”
இதேவேளை, புதிய சாரதி உரிமங்களை வழங்குவதில் உள்ள சிக்கல்கள் அக்டோபர் 18 ஆம் திகதிக்குள் தீர்க்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.