தியாக தீபம் லெப்.கேணல்.திலீபன். முதலாவது பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி ,

லெப். கேணல் குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் கேணல் சங்கர் ,கேணல் ராயூ ,லெப்.கேணல். சந்தோசம் ,லெப்.பரமதேவா ,லெப்.கேணல். நாதன்,கப்டன் கஜன்
ஆகியோரின் நினைவுகள் சுமந்து எழுச்சி வணக்க நிகழ்வு நெதர்லாந்தில் நடைபெற்றது
வட தமிழீழம் யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் 1987 ஒக்ரோபர் 10ம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியில் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்த தாக்குதல் 2ம் லெப். மாலதியின் இறுதி தாக்குதல். தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் முதற் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அதுவே தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாக அமைந்தது.
எமது பெண் போராளிகளின் அபாரமான போராற்றலை எடுத்தியம்ப காரணமாக அமைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பு 1985 ஆகஸ்ட் 18 அன்று தொடங்கப்பட்டது ஆகவே மகளிர் அமைப்பின் 40 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் 2025 ஆகிய நிகழ்வுகள் அனைத்துலக ரீதியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற நிலையில்
நெதர்லாந்தில் சிறப்பு வெளியீடாக அனைத்துலகத் தொடர்பகத்தின் மகளிர் அமைப்பினரால் வெளியீடு செய்யப்படும் சூரியப்புதல்விகள் பாகம் இரண்டு பாடல் தொகுப்பு வெளியீடு செய்யப்பட்டது