“இந்தியா-இஸ்ரேல் உறவுகள் செழிக்கட்டும்” இஸ்ரேல் பிரதமர் பிறந்தநாளுக்கு இந்தியப் பிரதமர் வாழ்த்து.

புதுடில்லி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வாழ்த்துக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். மேலும், இஸ்ரேல் பிரதமரின் பிறந்த நாளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

இது குறித்து, இந்திய பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் அன்பு நண்பரே, உங்கள் (இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு) தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி.

உங்கள் பிறந்தநாளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியை வாழ்த்துகிறேன். வரும் ஆண்டுகளில் இந்தியா – இஸ்ரேல் இடையே உறவு செழிக்கட்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: எனது நண்பர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்கள்.

தீபத்திருநாள் உங்கள் சிறந்த தேசத்திற்கு நம்பிக்கை, அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும். இஸ்ரேலும் இந்தியாவும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *