🚨களனி ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவசரகால வெளியேற்ற அறிவுறுத்தல்.
29-11-2025 | களனி –
அடுத்த சில மணித்தியாலங்களில் களனி ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் காரணமாக, களனி மற்றும் அதனை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் அதிகரித்து வருவதால் உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
களனி பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள மேவெல்ல, பெத்தியாகொட, சிங்காரமுல்ல, பேலியாகொட, வெலேகொட, ஹுணுப்பிட்டி வடக்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு முகாம்கள் அமைப்பு
வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து இடம்பெயரும் மக்களுக்கு தங்குமிட வசதிகள் கீழ்க்கண்ட பாதுகாப்பு முகாம்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன:
- களனி ரஜமகா விகாரை – விகாரமஹாதேவி ஓய்வு மண்டபம்
- குருகுல மகா வித்தியாலயம்
- தர்மாலோக வித்தியாலயம்
- தர்மதாஸ மகா வித்தியாலயம்
- ஜயதிலகாரம வித்தியாலயம்
- வெதமுல்ல வித்தியாலயம்
- துட்டுகெமுனு வித்தியாலயம்
- வெவிபார விகாரை
பாதுகாப்பு முகாம்களில் குடிநீர், உணவு, மருத்துவ உதவி மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கமும், மீட்பு பணிப்பிரிவுகளும் மக்களுக்கு தொடர்ந்து வழிகாட்டுதல்கள் வழங்கி வருவதால், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.