இலங்கையில் சீரற்ற வானிலை: காவல்துறை அவசர தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
29-11-2025 | கொழும்பு
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்படும் அனர்த்த சூழ்நிலைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க தொலைபேசி இலக்கங்கள் பொலிஸ் திணைக்களத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மண்சரிவுகள், வெள்ளம் மற்றும் பலத்த காற்று ஆகியவற்றால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான, அவசர காலங்களில், நாடு முழுவதும் அமைந்துள்ள 47 பொலிஸ் பிரிவுகளின் செயல்பாட்டு அறைகளுக்கு பொதுமக்கள் தகவல்களை தெரிவிக்கலாம்.
பொலிஸ் பிரிவுகளின் செயல்பாட்டு அறைகளின் தொலைபேசி இலக்கங்களை பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.

