நிகழ்வின் பொதுச்சுடரினை லெப்டினன் வேங்கைத்தமிழின் சகோதரன் விக்னேஸ்வரன்,
ஸ்கொட்லாந்து தேசியக் கொடியினை இளையோர் அமைப்பில்லிருந்த்து பிரவீன் ஜெயக்குமார் மற்றும் தமிழீழ தேசியக் கொடியினை கப்டன் கலைவாணனின் சகோதரன் நடனசிகாமணி குணேசன் அவர்களும், முதன்மைச்சுடரினை கப்டன் இளம்புலியின் சகோதரன் ஆனந் அவர்களும் ஏற்றி வைத்தார்கள்.

தாயகத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடனும் முன்னாள் போராளிகளுடனும் நீண்ட காலம் உள-சமூகப் பணியாற்றிய Felician அவர்கள் உரை ,ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் டென்சிகாவின் உரை அத்துடன் மாவீரர் நினைவுக் கவிதைகள் பாடல்கள் நடனங்கள் என பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Leave a Reply