தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

03-12-2025 | சென்னை –

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதனால், பள்ளிகளுக்கு மட்டும் இன்று (03-12-2025) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள மாவட்டங்கள்:
விழுப்புரம்
செங்கல்பட்டு
கள்ளக்குறிச்சி
கடலூர்

புதுச்சேரியிலும் இன்று (03-12-2025) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒத்திவைப்பு
இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலை மற்றும் சென்னை பல்கலைகழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply