இலங்கை, மொரகஹஹேன பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது.
05-12-2025 | இலங்கை –

பாணந்துறை பிரதேச குற்றப்புலனாய்வு பணியகத்தினரால் நேற்று (04-12-2025) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டு மொரகஹஹேன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 1062 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தம்பர மில்லேவ பகுதியை சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மொரகஹஹேன பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.