கண்டி மாவட்ட செயலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

27-12-2025 | கண்டி

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையை மேற்கொள்ள பொலிஸார் மற்றும் பொலிஸ விசேட அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக பெயர் தெரியாத ஒருவரிடமிருந்து மின்னஞ்சல் மூலம் மிரட்டல் செய்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply