
22.04.2025 – சென்னை
சென்னை, தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் அறையில், இ.பி.எஸ்.,யை தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். 30 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நடந்தது.
அப்போது இ.பி.எஸ்., அறையில் அ.தி.மு.க., மூத்த தலைவர்கள் எஸ்.பி., வேலுமணி, கடம்பூர் ராஜூ, தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
”மரியாதை நிமித்தமாகவே எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தேன்” என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். நடப்பு கூட்டத்தொடரில் முக்கியமான சில விஷயங்களை கேள்வி எழுப்ப ஆலோசனை நடந்ததாக தெரிகிறது. அ.தி.மு.க – பா.ஜ., கூட்டணி அறிவிப்புக்கு பின் முதல்முறையாக இ.பி.எஸ்.,யை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேச்சு நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பகிரவும்: