24.04.2025 – மட்டக்களப்பு
” ஏன் நாங்கள ஜே.வி.பி யை வெறுக்கிறோம் என்பதைக் கூறத்தேவையில்லை அது தமிழ் மக்கள் ஆழ்மனதில் உள்ளது”. கண்மூடித்தனமான யுத்தத்திற்கு சிங்கள மக்களை தயார்படுத்தியதும் இணைந்த வடகிழக்கை பிரித்ததும் இந்த ஜே.வி.பி தான் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பா.உ. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பற்று வேட்பாளர் அறிமுக நிகழ்வு புதன்கிழமை (23) மண்டூர் தம்பலவத்தை கிராமத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந் நிகழ்வில் கட்சியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் போன்ற கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பகிரவும்: