
24.04.2025 - கோயம்புத்தூர் கொடிசியா திடல்
மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் வருகின்ற 18-05-2025 அன்று, மாலை 04 மணியளவில் கோயம்புத்தூர் கொடிசியா திடலில் நடைபெறவிருக்கிறது.
மே 18, இனப் படுகொலை நாள்
வீரத்தமிழினம் இப்படி வீழ்ந்து போவதா!
மானத்தமிழினம் இதை மறந்து போவதா!
மாபெரும்
தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம்
தலைமை:
செந்தமிழன் சீமான் அவர்கள்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்:
வைகாசி 04 | 18-05-2025 மாலை 04 மணிக்கு
இடம்:
கொடிசியா திடல்
கோயம்புத்தூர்
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் உணர்வெழுச்சியோடு பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பகிரவும்: