வட தமிழீழம் யாழ் கோட்டை இராணுவ முகாம் மீதான தமிழீழ விடுதலைப்புலிகள் முற்றுகையைமுறியடிக்க முயன்ற இராணுவ முயற்சி முறியடிக்கப்பட்ட நாள். இச்சண்டையின் போது சியாமா செட்டி ரக குண்டுவீச்சு விமானமொன்று பண்ணைக் கடலுக்குள் சுட்டுவீழ்த்தப்பட்டது.

தொலைத் தொடர்புக் கட்டி டத்திலிருந்து பண்ணைச்சந்திக் காவலரணுக்கு உதவிகள் செல்வதைத் தடுப்பதற் காக மூன்று போர் விமானங்
கள் தொலைத் தொடர்பு நிலையப்பகுதியில் மாறி மாறி குண்டுகளை வீசத்தொடங்கின,
அவ்விமானங்கள் குண்டுகளை வீசிக்கொண்டிருக்க பண்ணைச் சந்தி அரணை நோக்கி முன்னே வந்த இராணுவத்தினரும் எமது துப்பாக்கிகளுக்கு இரையாகிக் கொண்டு வந்தனர், பண்ணைச் சந்தியி லுள்ள எமதுநிலைக்கு 5-6 யார் முன்னார்லுள்ள காப்பிடப் பகுதியில் வந்து நிலை எடுத்திருத்தும் அரணைக் கைப்பற்ற முடியாது தடுக்கப்பட்டனர்,
புலிகள், காற்றைக் காப்பரணாக்கி உயிரை ரவைகளாக்கி எதிரியுடன் போரிட்டுக்கொண்டிருந்தனர். இந்நிலையில் எதிரி விமானமொன்று ஆகாயத்தில் தாம் விரித்திருந்த ரவைக்குடை யைப் பிய்த்தபடி கீழேவந்துசரிநேராக எமது நிலைகளைத் தாக்கத்துவங்கியது.
இச்சண்டையில் ஈடுபட்டிருந்த புலிவீரன் ஒருவன் தெரிவித்தான். சுமார் 11.15 மணி இருக்கும், காது செவிடுபடும் படியான குண்டுச் சத்தங்களின் மத்தியிலும் விமானங்களின் இரைச்சல் – மிக மிகக் தாளப்பறப்பதற்கான அறிகுறியுடன் கேட்டது.
பிடரிப்பக்கம் வந்து மோதுவதைப் போன்று மிகவும் தாளப்பறந்து குண்டுவீசுவதும், பின்னர் காணாமல் போவதுமாக இருந்தது. இந்தச் சத்தத்திற்குச் செவி சாய்த்து அ ர ணை விட்டு வெளியே வந்து பார்க்க அவகாசம் இருக்கவில்லை .
இரண்டு, மூன்று தடவை”கள் அவ்விதமாகப் பதிந்து தாக்குவதும் பின்னர் மேலெம்பும் சத்தமும் கேட்டது. இறுதியாக உறுமியபடி பின் புறத்திலிருந்து எமது நிலைகளை நோக்கி வந்த விமானம் வழமைக்கு மாறாக பண்ணைக்கடல் பக்கமாக வித்தியாசமான ஒலி எழுப்பியபடி சென்றது. பின்னர் எந்த விமானத்தின் ஒலியும் எமக்குக் கேட்கவில்லை ..
”ஓடு மீன் ஓட உறு மீன்
வருமளவும் வாடி இருக்கு
மாம் கொக்கு”
என்பதைப்போல, தொலைத்தொடர்பு நிலையத்துக்கு அப்பால் ஒரு முனையில் உருமறைப்புச் செய்தபடி விமான எதிர்ப்புத் துப்பாக்கியுடனிருந்தஒரு தோழனுக்கு இரை கிடைத்துவிட்டது ,அவ்விமானம், தமிழீழ மண்ணில் தாளப்பறந்ததற்கான தண்டனையைப் பெற் றுபண்ணைக் கடலுக்குள் குப்புற விழுந்து விட்டது.