யாழ்ப்பாணம் – மடத்தடி பகுதியில் இன்று “கஞ்சா கலந்த மாவா”வுடன் 18 வயது இளைஞன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – மடத்தடி பகுதியில் 11ஆம் திகதி வியாழக்கிழமை  கஞ்சா கலந்த மாவாவுடன் 18 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 10 கிராம் 670 மில்லிகிராம் கஞ்சா கலந்த மாவா மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

⚠️ எச்சரிக்கை: இங்கே காணப்படும் படம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது. இது விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உண்மையான நபர்களையோ நிகழ்வுகளையோ பிரதிபலிக்காது.⚠️

Related posts

அகவை வாழ்த்து | 15 பிப்ரவரி

நினைவு வணக்கம் | 15 பிப்ரவரி

மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருள் ஏற்றிச் சென்ற டிங்கி படகு தடுத்து நிறுத்தப்பட்டது; இரண்டு சந்தேக நபர்கள் கைது!