முச்சக்கர வண்டியில் போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த மூன்று இளைஞர்கள் கினிகத்தேன பொலிஸாரால் கைது!

முச்சக்கரவண்டியில் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த மூன்று இளைஞர்கள் கினிகத்தேன பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (16.09.2025) கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கினிகத்தேன பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கினிகத்தேன – பிளக்வோட்டர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்களான இளைஞர்கள் மூவரும் முச்சக்கரவண்டியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கைதுசெய்யப்பட்டவர்கள் 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

சந்தேக நபர்களான இளைஞர்களிடமிருந்து, பொதிகளாக்கப்பட்ட ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் மூவரும் இன்று புதன்கிழமை (17.09.2025) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவங்களிலிருந்து தமது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கிறது!

இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!