“இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக” அக்குரெஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை, அக்குரெஸ்ஸ பகுதியில் மாத்தறை – காலி வீதியில் உள்ள கால்வாயில் இருந்து இன்று திங்கட்கிழமை (22.09.2025) காலை இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அக்குரெஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் அக்குரெஸ்ஸ,பரதுவ திப்பலைவத்த பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். 

சம்பவ இடத்தில் உள்ள மரமொன்றில்இருந்து குடை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்குரெஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Related posts

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவங்களிலிருந்து தமது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கிறது!

இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!