சென்னையில் தவெக தலைவர் நடிகர் விஜய் வீட்டை திமுக மாணவர் அணியினர் முற்றுகையிட்டனர்.

கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 2 வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை இதில் அடக்கம். சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது.

பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்தின் நீட்சியாக, நடிகரும், தவெக தலைவருமான விஜய்யை கைது செய்ய கோரி ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். மறுபுறம், தமிழக போலீஸ் கவனக்குறைவே இதுபோன்ற துயர சம்பவத்தின் காரணமாகி விட்டதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந் நிலையில், சென்னையில் பனையூரில் உள்ள விஜய் வீட்டை தமிழ் மாணவர் மன்றத்தினர் முற்றுகையிட்டனர். இவர்கள் திமுக மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். விஜய்க்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பிய போராட்டக்காரர்கள், குழந்தைகளின் உயிர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

இவர்களின் கண்டன போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பும், பதற்றமும் தொற்றிக் கொண்டது.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு