சென்னையில் தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சம்

சென்னையில் இன்று (அக் 04) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.87,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.10,950க்கு விற்பனை ஆகிறது.

சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் மிக அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதால், நம் நாட்டிலும் அதன் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நேற்று முன்தினம் (அக் 02) ஆபரண தங்கம் கிராம் 10,950 ரூபாய்க்கும், சவரன் 87,600 ரூபாய்க்கும் விற்பனையானது.

நேற்று (அக் 03) காலை தங்கம் விலை கிராமுக்கு, 110 ரூபாய் குறைந்து, 10,840 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 880 ரூபாய் சரிவடைந்து 86,720 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று மதியம் தங்கம் விலை கிராமுக்கு, 60 ரூபாய் உயர்ந்து, 10,900 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து 87,200 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று (அக் 04) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.87,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.10,950க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்தை நெருங்கியது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது.

வெள்ளி விலை

அதேபோல், வெள்ளி விலையும் தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 அதிகரித்து ஒரு கிராம் 165 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,65,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு