தமிழ்நாட்டில் ஒரே நாளில் தங்க நகைகளின் விலை சவரனுக்கு ரூ.3,680 குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று (22.10.2025) காலை சவரனுக்கு ரூ.2,400 குறைந்த நிலையில், மாலை ரூ.1,280 குறைந்தது. இதையடுத்து நேற்று மட்டும் சவரனுக்கு ரூ.3,680 குறைந்துள்ளது.

சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 21.10.2025 காலை ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 2,080 ரூபாய் உயர்ந்த நிலையில் மாலையில் 1,440 ரூபாய் குறைந்த ரூ.96 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. நேற்று காலை ஆபரண தங்கத்தின் விலை மேலும் ரூ.2,400 குறைந்து ஒரு சவரன் ரூ.93,600க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ரூ.11,700க்கு விற்பனை ஆனது.

இந்நிலையில் நேற்று மாலை ஆபரண தங்கத்தின் விலை மேலும் ரூ.1,280 குறைந்து ரூ.92,320க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து ரூ.11,540க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 5 குறைந்து ரூ.175 ஆக விற்பனை ஆகிறது.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு