முத்துநகர் விவசாயிகள் 39வது நாளாக சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்று (25.10.2025) சனிக்கிழமையுடன் 39 ஆவது நாளாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை திருமலை மாவட்ட செயலகம் முன்பாக நடாத்தி வருகின்றனர்.

தங்களது விவசாய காணிகளை சூரிய மின் சக்தி உற்பத்திக்காக தனியார் நிறுவனங்களுக்கு அடாத்தாக வழங்கப்பட்டதையடுத்து அன்றாட ஜீவனோபாயத்தை இழந்த நிலையில் போராடி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் விவசாயிகள் தங்கள் ஆதங்கங்களை தெரிவிக்கின்றனர். இங்குள்ள பிரதியமைச்சர் ஒருவர் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை கூறி விவசாயிகளை ஏமாற்றி வருகின்றார்.

விவசாய நீர்ப்பாசன குளங்களை அழித்தும் பொய்களை கூறி வருவதுதானா இவர்களின் சிஷ்டம் சேன்ஜ் எனவும் தெரிவிக்கின்றனர்.

Related posts

மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருள் ஏற்றிச் சென்ற டிங்கி படகு தடுத்து நிறுத்தப்பட்டது; இரண்டு சந்தேக நபர்கள் கைது!

அகவை வாழ்த்து | 14 பிப்ரவரி

நினைவு வணக்கம் | 14 பிப்ரவரி