கர்நாடகாவில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கைது.

கர்நாடகாவில் உள்ள கப்பல் கட்டும் தளம் தொடர்பாக பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவின் உடுப்பி மல்பேயில், ‘கொச்சி ஷிப்யார்டு’ நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் கட்டும் தளம் உள்ளது. நம் கடற் படைக்கு இங்கிருந்து தான், கண்காணிப்புப் பணிக்கான இழுவை படகுகள் தயாரிக்கப்படுகின்றன.

கப்பல் கட்டும் தளத்தில் பணி செய்யும் ஊழியர்கள் சிலர், தளத்தின் தகவல்களை வேறு யாருக்கோ கொடுப்பதாக மல்பே போலீஸ் நிலையத்தில் அந்த நிறுவனம் புகார் அளித்தது.

போலீசா ர் நடத்திய விசாரணையில், கப்பல் கட்டும் தளத்தில் வேலை செய்த உத்தர பிரதேசத்தின் ரோஹித், 29, சாந்த்ரி, 37, ஆகியோர், கப்பல் கட்டும் தளத்தின் கட்டுமானம், பழுதுநீக்கும் பணிகள் குறித்து, ‘வாட்ஸாப்’ மூலம் பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பியது தெரிந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு