கண்டன ஆர்ப்பாட்டம் – பிரித்தானியா

தமிழர் தாயகத்திற்காக உயிர் தந்த மாவீரர்களின் நினைவு கூறும் இந்த மாதத்தில் இன அழிப்பாளர்கள் அரசியல் நோக்கங்களுடன் பிரதிநிதிகள் வருகை தருவதை எதிர்த்து, தமிழர் ஒருங்கிணைப்பு குழு திருகோணமலையில் வலுவான போராட்டத்தை முன்னெடுத்தது.

சிங்கள–பெளத்த பேரினவாதிகளால் முறையாக ஆக்கிரமிக்கப்பட்டு வரும் தமிழர் தாயகத் தலைநகரமான திருகோணமலையில் நடைபெற்ற இந்த போராட்டமானது பிரித்தானிய அல்பேட்டன் பாடசாலை முன்பாக நடைபெற்றது. பேரினவாத அரசியலின் முகமாகக் கருதப்படும் ரில்வின் சில்வாவின் (JVP–NPP) பிரித்தானிய வருகைக்கு எதிராக கடும் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டன.

நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் இணைந்து பங்கேற்ற இந்த போராட்டத்தில், தமிழர் உரிமைகள், இனப் பாதுகாப்பு மற்றும் வரலாற்று நீதி குறித்து வலியுறுத்தும் கோஷங்கள் முழங்கப்பட்டன.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அன்னை பூபதி நினைவு தினம் / நாட்டுப்பற்றாளர்கள் நினைவு தினம் – பிரான்ஸ் 2026

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.