இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மேல் கடற்படை கட்டளை கடற்படை வீரர்களின் பங்களிப்புடன் நேற்று 27-12-2025 ஆம் திகதி காலி முகத்திடல் கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் காலி முகத்துவாரத்திற்கு முன்னால் உள்ள கடற்கரையில் சிதறிக் கிடந்த பிளாஸ்டிக், பொலித்தீன் உள்ளிட்ட திடக்கழிவுகள் கடற்கரையிலிருந்து அகற்றப்பட்டு கடற்கரைச் சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் முறையாக அப்புறப்படுத்தப்பட்டது.
மேலும், மேல் கடற்படை கட்டளைத் தளபதி உட்பட 200க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.