கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் பெருமளவு கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது.

கிளிநொச்சி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே, குறித்த நபர் கைது செய்யப்பட்டு, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 131 கிலோகிராம் 13 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related posts

புனித வாரத்தை சேவை மற்றும் புதுப்பிப்பின் அழைப்புடன் தொடங்கிய போப் லியோ

டிரம்ப் எச்சரிக்கைக்கு பதிலளித்த ஈரான்: “அதிகக் கொடூரமான தாக்குதல்கள் வரும்” என எச்சரிக்கை

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்