
18.03.2025 – சீகிரியா
சீகிரியாவுக்கு சென்ற ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி முறையான முதலுதவி இல்லாததால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பிலனான வீடியோவை பதிவிட்டுள்ள சிலோன் ஸ்பிரிட் சுற்றுலா சங்கத்தின் செயலாளர் என்.பி. விஜேசிங்க, கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் உட்பட மொத்தம் 06 பேர் சிகிரியாவில் முறையான முதலுதவி சேவைகள் இல்லாததால் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளார்.
அத்துடன், சுற்றுலா தலங்களில் முறையான முதலுதவி வசதிகள் தொடர்பாக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பகிரவும்: