
15.03.2025 – கனடா
கனடாவின் நீதி அமைச்சராக கரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் அட்டர்னி ஜெனரலாகவும், மற்றும் கிரவுன் – இனிஜினஸ் ரிலேஷன்ஸ் மற்றும் வடக்கு விவகாரங்கள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (14) மார்க் கார்னி தனது முதல் அமைச்சரவையை வெளியிடும் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும், இதன் மூலம் இந்தப் பதவியை வகிக்கும் முதல் தமிழ்-கனடியர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார்.
ஒரு வழக்கறிஞரும் தமிழர் உரிமைகளுக்காக நீண்டகாலமாக வாதிடும் ஆனந்தசங்கரி, இலங்கையில் போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்கும் இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கும் அழுத்தம் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
கனடாவின் நீதித்துறை அமைச்சராக ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டது கனடாவிலும் உலகளவில் தமிழ் சமூகத்திற்கு ஒரு மைல்கல் ஆகும்.
ஈழத் தமிழ் பாரம்பரியத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மேற்கத்திய அரசாங்கத்தில் இவ்வளவு மூத்த பதவி வழங்கப்படுவது இதுவே முதல் முறை எனலாம்.
பொறுப்புக்கூறலுக்காக சிங்கள அரசு மீது சர்வதேச அழுத்தம் இருக்கும் ஒரு முக்கியமான நேரத்தில் அவரது நியமனம் இடம்பெற்றுள்ளது.
சிங்கள இனவாத அரசின் கூலிகளாக ஒட்டுக்குழுக்கள் இயங்கிவருகின்றனர். இவர்கள் தமது குடும்பத்தின் தனிப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்காக சிங்கள அரசால் கொடுக்கப்படும் சலுகைகளை இன்றும் அனுபவித்து வருவதுடன் தொடர்ந்தும் தமிழீழ விடுதலையிற்கு எதிராக இயங்கி வருவதையும் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. EPDP, EPRLF, TELO, PLOT, ஆனந்த சங்கரி போன்ற பலர் இப்பட்டியலில் அடங்குவர்.
கெரி ஆனந்தசங்கரி ஆனந்தசங்கரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
பகிரவும்: