தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணித்தள இளையோர்களின் நிதிப்பங்களிப்பில் 31.12.2025 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டுக் கிழக்கு கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது. இதில் அரிசி, மா, சீனி, தேயிலை, கடலை, சோயா என்பன உள்ளடங்கலான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. இவ்வுதவியினை வழங்கிய யேர்மனி பிராங்பேர்ட் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணித்தள இளையோருக்கு, உடையார்கட்டு கிழக்கு மக்கள் மனம்நிறைந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.