காவியநாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 33’ம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு – பிரித்தானியா

பொங்கல் விழா நிகழ்வுகளைத் தொடர்ந்து, காவியநாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 33ஆம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் உணர்வுபூர்வமாக முன்னேடுக்கப்பட்டது .

நிகழ்வின் ஆரம்பமாக ஈகைச்சுடர் ஏற்றல், அகவணக்கம், வீரமறவர்களின் திருஉருவப் படங்களுக்கு மலர்மாலை அணிவித்தல், மலர்வணக்கம் மற்றும் சுடர்வணக்கம் ஆகியவை இடம்பெற்றன.

தொடர்ந்து நடைபெற்ற மேடை நிகழ்வுகளில் கவிதை, நடன நிகழ்ச்சிகள் மற்றும் உரைகள் இடம்பிடித்தன. ஆசிரியை சுகி ஆனந் அவர்களின் வழிகாட்டலில் அவர்களின் மாணவர்களின் நடன நிகழ்வும், ஆசிரியை சாமினி கண்ணன் அவர்களின் மாணவிகளின் நடன நிகழ்வும் நடைபெற்றன .

இறுதியாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” பாடல் (ஒலி வடிவில்) ஒலிக்க, தேசியக் கொடிகள் கையேந்தப் பட்டது. வீரமறவர்களின் வழியில் பயணிப்போம் என்கின்ற உறுதியோடு நிகழ்வானது நிறைவடைந்தது.

Related posts

“நாம் ஒன்றாகச் சேர்ந்தவர்கள்” — ஐரோப்பாவுக்கு ருபியோ; ஆனால் “தங்களைத் தாங்களே காக்கத் தயாராகுங்கள்” என எச்சரிக்கை

படிகட்டுகளின் கீழ் பதுங்கும் புதிர்: ஈரான் அணு நிலையம் அருகே நிலத்தடி வளாகத்தை பலப்படுத்துகிறது – செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்துகின்றன

இலங்கை தலங்கம இரட்டைக் கொலை: சந்தேக நபர்களைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது!