தாயை கத்தியால் குத்தி கொலை செய்த மகன்

காலியில் அஹங்கம – தித்தகல்ல பகுதியில் கடந்த வியாழக்கிழமை (15-01-2026) தாயை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மகனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் சமீர தொடன்கொட உத்தரவிட்டுள்ளார்.

அஹங்கம – தித்தகல்ல பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய மகனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

அஹங்கம – தித்தகல்ல பகுதியில் கடந்த வியாழக்கிழமை (15-01-2026) சந்தேக நபரான மகன் மதுபோதையில் தனது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ள நிலையில் பின்னர் தனது தாயை கத்தியால் குத்தி கொலைசெய்துள்ளார்.

காயமடைந்த மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கொலைசெய்யப்பட்டவர் அஹங்கம – தித்தகல்ல பகுதியை சேர்ந்த 80 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் ஆவார்.

இதனையடுத்து சந்தேக நபரான மகன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவங்களிலிருந்து தமது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கிறது!

இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!