காலி சிறைச்சாலையில் கிணற்றில் விழுந்த கைதி உயிரிழப்பு!

காலி சிறைச்சாலையில் உள்ள கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த கைதி ஒருவர் திடீரென கிணற்றில் விழுந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18-01-2026) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அக்மீமன, கொனமுல்ல பிரதேசத்தில் 22 வயதுடைய கைதி ஆவார்.

கைதி போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் அக்மீமன பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி சிறைச்சாலையில் உள்ள கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த போது திடீரென கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் சிலர் இணைந்து கிணற்றில் விழுந்த கைதியை காப்பாற்றி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றியதையடுத்து அவர் ஞாயிற்றுக்கிழமை (18-01-2026) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

டி20 உலகக் கோப்பை: ஓமான் மீது அயர்லாந்து 96 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி

“நாம் ஒன்றாகச் சேர்ந்தவர்கள்” — ஐரோப்பாவுக்கு ருபியோ; ஆனால் “தங்களைத் தாங்களே காக்கத் தயாராகுங்கள்” என எச்சரிக்கை

படிகட்டுகளின் கீழ் பதுங்கும் புதிர்: ஈரான் அணு நிலையம் அருகே நிலத்தடி வளாகத்தை பலப்படுத்துகிறது – செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்துகின்றன