பூஸா சிறைச்சாலையில் திடீர் சோதனையில் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “மன்னா ரமேஷ்” என்பவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூண்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் புதன்கிழமை (21-01.2026) கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, “மன்னா ரமேஷ்” என்பவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூண்டில் இருந்து 1 கிரொம் ஹெரோயின் போதைப்பொருள், கையடக்கத் தொலைபேசிகள், 2 சிம் அட்டைகள், டேட்டா கேபிள் மற்றும் கையடக்கத் தொலைபேசி சார்ஜர் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

டி20 உலகக் கோப்பை: ஓமான் மீது அயர்லாந்து 96 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி

“நாம் ஒன்றாகச் சேர்ந்தவர்கள்” — ஐரோப்பாவுக்கு ருபியோ; ஆனால் “தங்களைத் தாங்களே காக்கத் தயாராகுங்கள்” என எச்சரிக்கை

படிகட்டுகளின் கீழ் பதுங்கும் புதிர்: ஈரான் அணு நிலையம் அருகே நிலத்தடி வளாகத்தை பலப்படுத்துகிறது – செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்துகின்றன