இலங்கையில் போதைப்பொருள் சோதனைகளில் 804 பேர் கைது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் வியாழக்கிழமை (29-01-2026) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 804 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது,:

443 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும்,
878 கிராம் ஐஸ் போதைப்பொருளும்,
04 கிலோ 423 கிராம் 180 மில்லிகிராம் கொக்கேயின் போதைப்பொருளும்,
02 கிலோ 208 கிராம் கஞ்சா போதைப்பொருளும்,
9540 கஞ்சா செடிகளும்,
001 கிராம் குஷ் போதைப்பொருளும்,
009 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும்,
6231 போதை மாத்திரைகளும்,
274 கிராம் 250 மில்லிகிராம் மதனமோதக மாத்திரைகளும்,
02 கிலோ 006 கிராம் மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்களில் 05 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

டி20 உலகக் கோப்பை: ஓமான் மீது அயர்லாந்து 96 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி

“நாம் ஒன்றாகச் சேர்ந்தவர்கள்” — ஐரோப்பாவுக்கு ருபியோ; ஆனால் “தங்களைத் தாங்களே காக்கத் தயாராகுங்கள்” என எச்சரிக்கை

படிகட்டுகளின் கீழ் பதுங்கும் புதிர்: ஈரான் அணு நிலையம் அருகே நிலத்தடி வளாகத்தை பலப்படுத்துகிறது – செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்துகின்றன