பெல்சியத்தில் மிக சிறப்பாக நடைபெற்ற தமிழ் மரபுத்திங்கள் பொங்கல் விழா 2026
உழவர் திருநாள் ஒவ்வொரு ஆண்டும் ‘தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பெல்சியம் கிளையினரால் நடத்தப்படும் உழவர் திருநாள் நிகழ்வு இவ்வாண்டும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
முதல் நிகழ்வாக மங்களவிளக்கேற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, புத்தரிசியில் பொங்கல் வைத்து கதிரவனுக்கு படையல் இட்டு வழிபாடு நடைபெற்றது. எம் தேசத்திற்காக உயிர் நீத்த மாவீரர்கள், நாட்டுப்பற்றாளர்கள், மற்றும் பொதுமக்கள் நினைவு கூறப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டது.
வந்தோரை வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து வரவேற்பு நடனம் இடம் பெற்றது. அரங்க நிகழ்வாக உழவர் திருநாள் தொடர்பான சிறப்புப் பேச்சு, கவிதை, பாடல்கள், நாட்டிய நாடகம், நடன நிகழ்வுகள் வெகு சிறப்பாக இடம் பெற்றது.
இவ்விழாவில் பெருமளவான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.