இன்று இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில், பாதுகாப்புத் துறைக்கு ரூ.7.84 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறைக்கு ரூ.7.84 லட்சம் கோடி ஒதுக்கீடு.

இதில் பாதுகாப்புப் படையை நவீனப்படுத்துவதற்கு என ரூ.2.19 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பென்சனுக்காக ரூ.1.71 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் , புதிய ஆயுதங்கள் மற்றும் நவீன உபகரணங்கள் வாங்குவதற்கான மூலதனச் செலவாக ரூ.2,19 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது நாட்டின் ஜிடிபியில் 11 சதவீதம் ஆகும்.

ரபேல் போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளிட்டவற்றை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு ரூ.6.81 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

இடன் கார்டன்ஸில் இங்கிலாந்தின் துல்லிய வெற்றி: ஸ்காட்லாந்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

“நாம் ஒன்றாகச் சேர்ந்தவர்கள்” — ஐரோப்பாவுக்கு ருபியோ; ஆனால் “தங்களைத் தாங்களே காக்கத் தயாராகுங்கள்” என எச்சரிக்கை

படிகட்டுகளின் கீழ் பதுங்கும் புதிர்: ஈரான் அணு நிலையம் அருகே நிலத்தடி வளாகத்தை பலப்படுத்துகிறது – செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்துகின்றன