இந்தியாவிலேயே முதன்முறையாக கொச்சி சர்வதேச விமான நிலையம் பயணிகள் போக்குவரத்திற்காக ஹைட்ரஜனில் இயங்கும் பேருந்துகளை அறிமுகப்படுத்துகிறது.

மத்திய அரசின் தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்துடன் இணைந்து, ஹை ட்ரஜன் பள்ளத்தாக்கு திட்டத்தை கேரள அரசு துவங்கி உள்ளது. இத ற்காக, ‘ஹைட்ரஜன் வேலி இன்னோவேஷன் கிளஸ்டர்’ எனப்படும் எச்.வி.ஐ.சி., என்ற நிறுவனத்தையும் உருவாக் கி உள்ளது.

இந்நிறுவனம் சமீபத்தில், கொச்சி சர்வதேச விமான நிலையத்துடன் இணைந்து, ஹைட்ரஜன் பஸ்களை இயக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற் கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம், நாட்டின் முதல் ஹைட்ரஜன் பஸ் சேவை கொச்சி விமான நிலையத்தில் அறிமுகமாக உள்ளது. இந்த பஸ்களை வாங்குவதற்கான நிதியுதவியை மாநில அரசின் எச்.வி.ஐ.சி., நிறுவனம் வழங்கும்.

இதற்காக ஒரு பேருந்துக்கு 2.90 கோடி ரூபாய் வரை அனுமதி வழங்கியுள்ளனர். திட்டத்தின் மொத்த மதிப்பு 8.70 கோடி ரூபாய். ஓராண்டுக்குள் இந்த பஸ்கள் வினியோகிக்கப்பட உள்ளன.

அதன் பின், அதன் இயக்க மற்றும் நிர்வாக செலவு, வழித்தடம் ஆகியவற்றை விமான நிலைய நிறுவனம் முடிவு செய்யும். தடையற்ற ஹைட்ரஜன் எரிபொருள் வினியோகத்திற்காக பாரத் பெட்ரோலியம் மற்றும் கொச்சி சர்வதேச விமான நிலைய நிறுவனம் இணைந்து, பசுமை ஹைட்ரஜன் ஆலையை அமைக்க உள்ளது.

Related posts

இடன் கார்டன்ஸில் இங்கிலாந்தின் துல்லிய வெற்றி: ஸ்காட்லாந்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

இந்தியப் பிரதமர் மோடியின் விமானம் அவசரமாக தரையிறங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கியது.

வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, கொல்கத்தா-ஷில்லாங் விமானத்தில் இருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.