இலங்கைப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்; அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இரண்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அரச சேவையில் பணியாற்றும் பட்டதாரிகளும், அரச சேவைக்கு வெளியிலுள்ள பட்டதாரிகளும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாக உள்ளனர். 10.02.2023 அன்று அரச சேவையில் நியமனம் பெற்று பணியில் இருந்தவர்களாகவும், அதே திகதியில் 45 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், தேவையான பட்டப்படிப்பு தகுதிகளை பூர்த்தி செய்தவர்களாகவும் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்சேர்ப்பு தொடர்பான மேலதிக தகவல்களுக்கு வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கல்வி அமைச்சை தொடர்புகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

டி20 உலகக் கோப்பை: ஓமான் மீது அயர்லாந்து 96 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி

இலங்கையில் பண்டாரவளை குவாரியில் ஏற்பட்ட பாறை சரிவில் இரண்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்!

இலங்கை தலங்கம இரட்டைக் கொலை: சந்தேக நபர்களைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது!