இலங்கைப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்; அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இரண்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அரச சேவையில் பணியாற்றும் பட்டதாரிகளும், அரச சேவைக்கு வெளியிலுள்ள பட்டதாரிகளும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாக உள்ளனர். 10.02.2023 அன்று அரச சேவையில் நியமனம் பெற்று பணியில் இருந்தவர்களாகவும், அதே திகதியில் 45 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், தேவையான பட்டப்படிப்பு தகுதிகளை பூர்த்தி செய்தவர்களாகவும் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்சேர்ப்பு தொடர்பான மேலதிக தகவல்களுக்கு வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கல்வி அமைச்சை தொடர்புகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவங்களிலிருந்து தமது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கிறது!

இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!