இலங்கை சபாநாயகர் மீது புகார்!

இடைநீக்கம் செய்யப்பட்ட பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, சபாநாயகருக்கு எதிராக, தாக்கல் செய்த முறைப்பாட்டை விசாரிக்க இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அண்மையில் கூடிய இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம், குறித்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டதுடன், முறைப்பாடு தொடர்பில் அதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, இடைநீக்கம் செய்யப்பட்ட சமிந்த குலரத்னவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் பெறப்பட்ட குறித்த முறைப்பாட்டை ஆராய்வு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவங்களிலிருந்து தமது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கிறது!

இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!