தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும், ரேஷன் கார்டுகளை தமிழக அரசு வழங்குகிறது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில், 2.27 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அரசின் வரும் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், அந்த நிதியாண்டு இறுதியில் அரசின் மொத்த கடன், 10.62 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, ரேஷன் கார்டுகள் அடிப்படையில் கணக்கிட்டால், ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் தலா, 4.66 லட்சம் ரூபாய் கடன் சுமை உள்ளது.