அநுராதபுரம் – ஸ்வஸ்திபுர பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை (20-02-2026) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

அநுராதபுரம் பொலிஸ் அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே அந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 390 லீற்றர் கோடா மற்றும் 67.5 லீற்றர் சட்டவிரோத மதுபானம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அநுராதபுரம் – ஸ்வஸ்திபுர பகுதியை சேர்ந்த 59 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Related posts

இலங்கையின் வெல்லவாயாவில் விபத்து: நான்கு போலந்து சுற்றுலாப் பயணிகள் மருத்துவமனையில் அனுமதி!

இலங்கையின் தேசிய திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 831 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது!

இலங்கை வானிலை அறிக்கை