இலங்கை நீரோட்டத்தல் அடித்துச்செல்லப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் மூன்றுபேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். Amizhthu21 February 2026015 views ஹிக்கடுவை – நரிகம கடலில் நீராடச்சென்று, நீரோட்டத்தல் அடித்துச்செல்லப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் மூன்றுபேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை (20-02-2026) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இரண்டு ஆண்களும், பெண் ஒருவருமே இவ்வாறு நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். இதன்போது, கடற்கரையில் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர், அவர்களை மீட்டு அடிப்படை முதலுதவியளித்துள்ளனர். மீட்கப்பட்ட, 44 வயதுடைய ஆணும், 31 வயதுடைய பெண்ணும் ரஸ்ய நாட்டை சேர்ந்தவர்கள் எனவும், 60 வயது பிரித்தானியா நாட்டவர் ஒருவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.