மட்டக்களப்பு சிறைக் கைதிகளினால் செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கையின் அறுவடை விழாநடைபெற்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக் கைதிகளினால் செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கையின் அறுவடை விழா நேற்று வியாழக்கிழமை (05-03-2026) காலை சிறைச்சாலை அத்தியட்சகர் அசித குணதிலக தலைமையில் நடைபெற்றது.

சிறைச்சாலைக்குச் சொந்தமான திருப்பெருந்துறையிலுள்ள திறந்த வெளிச்சிறைச்சாலை காணியில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் இவ் வேளான்மை செய்கை பண்ணப்பட்டிருந்தது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் விதைப்புச் செய்யப்பட்ட இச்செய்கையின் மூலம் ஏக்கர் ஒன்றிற்கு 15 மூடைகள் எதிர்பார்க்கப்படுவதாக சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்தார்.

இயற்கை முறையில் செய்கை பண்ணப்பட்டிருந்த குறித்த நெற்செய்கை சிறந்த விளைச்சலைத் தந்திருப்பதாக சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்தார்.

பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து இவ்வேளான்மை அறுவடை விழா இடம் பெற்றது.

சிறைச்சாலை பிரதம ஜெயிலர் எஸ்.ரத்நாயக்கா உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் மாவட்ட கமத்தொழில் அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள்,மதத்தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

மார்ச் 8 அனைத்துலக மகளிர் நாள் – கவனயீர்ப்பு ஒன்றுகூடல் – சுவிஸ்

தமிழ்நாட்டின் எல்லையை தங்கள் எல்லையென அறிவிப்புப் பலகை வைக்கும் கேரள அரசின் அத்துமீறலை திமுக அரசு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது! – சீமான் எச்சரிக்கை

சீமான் பேச்சு: தமிழக வெற்றிக் கழகத்திற்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே மாற்றுப் போராட்டம் | பொது நலனில்