பேருவளை பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு மீன்பிடி படகையும் இலங்கை கடற்படை கண்டுபிடித்துள்ளது.

பேருவளை பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பலநாள் மீன்பிடி படகையும் கடற்படையினர் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கடற்படையினரின் நடவடிக்கையில், போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த மற்றுமொரு மீன்பிடி படகை இன்று திங்கட்கிழமை (16-03-2026) கண்டுபிடித்துள்ளனர்.

அதில் உள்ள போதைப்பொருளின் அளவை இப்போதே சரியாகக் கூற முடியாது. படகை கரைக்கு கொண்டு வந்த பின்னரே அது குறித்துத் தெரிவிக்க முடியும்.

இதற்கு முன்னரும் கடந்த வாரத்தில் தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்திய 03 பலநாள் மீன்பிடி படகுகளை கடற்படையினர் கண்டுபிடித்திருந்தனர்.

அதன்படி, இந்த ஆண்டில் மட்டும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 07 பலநாள் மீன்பிடி படகுகளை கடற்படையினர் சுற்றிவளைத்துள்ளோம் என்றார்.

Related posts

சோமாலியா மற்றும் இல்‌ஹான் ஓமரை குறிவைத்து டிரம்ப் கடுமையான விமர்சனம்

ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்க பல நாடுகளை இணைக்க கேட்டதாக டிரம்ப் கூறுகிறார்

எரிபொருள் வரிசைகளுக்கு மத்தியில் பள்ளிகளை மூடுவதா! அல்லது தொலைதூரக் கல்வியைத் தொடங்குவதா! என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: இலங்கை கல்வி அமைச்சு!