கிளிநொச்சியின் பள்ளிகுடா பகுதியில் 2000 கடல் அட்டைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டனர்.

கிளிநொச்சியின் பள்ளிக்குடா பகுதியில் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட சுமார் 2000 கடல் அட்டைகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு கடற்படை கட்டளையின் ‘இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமண’ பிரிவின் பள்ளிக்குடா கடற்படை வரிசைப்படுத்தல் பிரிவினர் வியாழக்கிழமை 12 ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிக்குடா பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கெப் வண்டி ஒன்றைக் கடற்படையினர் வழிமறித்துச் சோதனை செய்தனர்.

இதன்போது, எவ்விதமான சட்டப்பூர்வ அனுமதியுமின்றி கடத்திச் செல்லப்பட்ட சுமார் 2000 கடல் அட்டைகள் மீட்கப்பட்டன. இதனையடுத்து, குறித்த வாகனத்துடன் மூன்று சந்தேகநபர்களும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 முதல் 54 வயதுக்குட்பட்ட கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கெப் வண்டி என்பவற்றுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சந்தேகநபர்கள் கிளிநொச்சி மாவட்ட கிளிநொச்சி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

மட்டக்களப்பில் டெங்கு பரவல் அதிகரிப்பு

டெவில்ஸ் பொய்ண்ட் கடல் பகுதியில் மிதந்த வெளிநாட்டு கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன.

கோப்பாய் காவல் நிலையத்தில் தீ விபத்து